Sunday, April 24, 2011

காதல் உலகில்....

மாற்றங்களால் ஆளப்படுகிறது என் உள்ளம், தினம் தினம்..
ஆனால் பக்குவமாய் உன் வசம் மட்டும்.

என்னை மொய்க்கும் உன் நினைவுகள்..
உயிர்ப்பை மரணிக்க செய்யும் உன் வார்த்தைகள்..
உருகும் என்னில் மெருகும் நம் காதல்..
இவைதான் என் உயிரை உள்வாங்கும் மர்மங்களா??


Friday, April 15, 2011

கனா கண்டேனடி...



தாருக்கு பதிலாக தங்கத்தை ஊற்றி அதை சாலையாக்கி,
அதில் வெண்ணிற ஆடை போற்தினாற்போல் வெள்ளி மழை பொழிய,
பவள முத்துக்கள் துளிகளாய் ஒட,
பன்னீர் வாசனையும் பெய்துகொண்டிருக்க,
கத்தாயாய் இருந்த பணத்தை கப்பலாக்கிக் கொண்டிருந்தனர் கள்ளகபடமில்லா சிறுமியர்...
சாலைடயின் இருமங்கிலும் சந்தன பூக்கள் மணம் வீச,

அங்கே...

"சாதி" எனும் சாக்கடை ஒடவில்லை..
"சாந்தம்" எனும் நீரூற்று மட்டும் ஓடிற்று..
இதுவே நான் கண்ட கனவு..
கனவை நினைவாக்க புத்தம் புது பூமி வேண்டும்..
ஆம்.. சாதி மத பேதமில்லா புத்தம் புது பூமி வேண்டும்....!!!

மாற்றமாய் நீ....


உன் மீது நான் கொள்ளும் கோபங்கள், ஏனோ காற்றுக்குமிழ் போல் அடுத்த நொடியே மறைந்து விடுகின்றன?
உன் வார்த்தையில் மட்டுமில்லை மாயம், உன் மௌனத்திலும் தான்...

காற்றுவழியே நீ செய்யும் விந்தைகள் பல நூறு..
காலந்தனையே கேட்கச்சொல்லும் வார்த்தை வரலாறு..

நினைவில் மிதக்கிறாய், உயிரில் கலக்கிறாய்..
நீ செய்யும் லீலைக்களில், கண்ணனும் தோற்றுப்போகிறான்...
கள்வனே - நீ கடவுள் என்பதையும் உணர்த்திவிட்டாய்...

வேறு என்ன நான் சொல்ல, நித்தமும் உன் வழிச் செல்ல
ஏங்கும் பாவையின் உயிர் கொல்ல, வருவாய் நீ தினம் மெல்ல.