தாருக்கு பதிலாக தங்கத்தை ஊற்றி அதை சாலையாக்கி,
அதில் வெண்ணிற ஆடை போற்தினாற்போல் வெள்ளி மழை பொழிய,
பவள முத்துக்கள் துளிகளாய் ஒட,
பன்னீர் வாசனையும் பெய்துகொண்டிருக்க,
கத்தாயாய் இருந்த பணத்தை கப்பலாக்கிக் கொண்டிருந்தனர் கள்ளகபடமில்லா சிறுமியர்...
சாலைடயின் இருமங்கிலும் சந்தன பூக்கள் மணம் வீச,
அங்கே...
"சாதி" எனும் சாக்கடை ஒடவில்லை..
"சாந்தம்" எனும் நீரூற்று மட்டும் ஓடிற்று..
இதுவே நான் கண்ட கனவு..
கனவை நினைவாக்க புத்தம் புது பூமி வேண்டும்..
ஆம்.. சாதி மத பேதமில்லா புத்தம் புது பூமி வேண்டும்....!!!
No comments:
Post a Comment