உன் மீது நான் கொள்ளும் கோபங்கள், ஏனோ காற்றுக்குமிழ் போல் அடுத்த நொடியே மறைந்து விடுகின்றன?
உன் வார்த்தையில் மட்டுமில்லை மாயம், உன் மௌனத்திலும் தான்...
காற்றுவழியே நீ செய்யும் விந்தைகள் பல நூறு..
காலந்தனையே கேட்கச்சொல்லும் வார்த்தை வரலாறு..
நினைவில் மிதக்கிறாய், உயிரில் கலக்கிறாய்..
நீ செய்யும் லீலைக்களில், கண்ணனும் தோற்றுப்போகிறான்...
கள்வனே - நீ கடவுள் என்பதையும் உணர்த்திவிட்டாய்...
வேறு என்ன நான் சொல்ல, நித்தமும் உன் வழிச் செல்ல
ஏங்கும் பாவையின் உயிர் கொல்ல, வருவாய் நீ தினம் மெல்ல.
No comments:
Post a Comment